கனா கண்டேனடி சகியே -25

கனா கண்டேனடி சகியே -25

“அதுக்கு இல்லடி…!!” என கனலினியின் எண்ணம் அறிந்தவன் கூற… அதில் கையை விலக போனவளின் கையை விடமால்  பற்றி கொண்டவன்…

“அமைரா…??”

“எஸ் பாஸ்…!!”

“இந்த துப்பாக்கில எத்தனை குண்டு இருக்குனு ஸ்டீபன எண்ண சொல்லு அவன் சரியா  எண்ணுறானனு நீயே பாரு…!!” என அவளை அனுப்பி வைக்க முயல…

“எஸ் பாஸ் ஆனா மேடம்…???” இழுக்க…

” கிளம்ப மாட்டா போலயே…!!” என நினைத்து கொண்டவன்…” மிஸ் அமைரா நான் உங்க மேடம் பக்கத்துல இருக்கும்போது எதுவும் ஆக விட மாட்டேன் நீங்க என்னை நம்பி போகலாம்…!!” விரட்டாத குறையாக கூற 

” புரிஞ்சது பாஸ்..!!”  கர்ம சிரத்தையாக துப்பாக்கியை வாங்கி கொண்டவள் ஏதோ ராமனின் பாதரட்சை  பரதன் கொண்டு செல்வது போல் தூக்கி சென்றாள் சோனாலி என்கிற அமைரா…

வெளியே வந்தவள் துரியன் அவளிடம் சொன்ன செய்தியை ஸ்டீபனிடம் கூற…

” எதற்காக அப்படி சொல்லி இருப்பான்…?? என்பதை அறிந்தவன்… துப்பாக்கியை வாங்கி பார்க்க அதில் “குண்டே இல்லை…!” என்பதை காட்ட அமைராவோ… “நான் போய் பாஸ் கிட்ட சொல்லிட்டு வரேன் இதுல குண்டு இல்லன்னு…!” எனத் திரும்பி நடக்க…

” இடியட்… இடியட்…   உனக்கு கொஞ்சம் கூட அறிவே இருக்கத்தாடி… உன்னை வெளிய அனுப்ப தான் பாஸ் இப்படி பண்ணி இருக்கார் அதை கூட புரிஞ்சிக்க முடியாதா…!!” என திட்டி கொண்டே போக…

அதில் அந்த காட்டு ரோஜாவும் காயம் கொண்டது… 

“போதும் நிறுத்துங்க ஸ்டீபன் நீங்க மட்டும் என்ன புரிஞ்சிக்கிட்டிங்களா… எங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க ட்ரெயினிங் சேர்ந்த முதல் நாள்ல இருந்தே என் கண்ணு யாரா பார்க்குது மனசு யாரா தேடுதுனு உங்களுக்கு தெரியாதா…??? சரி நீங்க என்ன புரிஞ்சிக்கலனா கூட பரவல ஆனா அதிகமா காய படுத்துறதே நீங்க தான்… ஏன் உங்களுக்கு தெரியாத என்கிட்ட குடுத்த துப்பாக்கி சைலன்சர் இல்லாத அதிக புல்லட் போட முடியாத கண்ணு… அதை வச்சு எப்படி நான் மேடம காப்பாத்தி இருக்க முடியும்… அதோட உங்களுக்கு அவங்க மேல பட்ட சின்ன கீறல் மட்டும் தான் தெரியுதா…???  உங்க கண்ணுக்கு என் காயமும் வலியும் தெரியவே தெரியாதா…???” என கண்ணீர் வடித்தவள்…

“நீங்க என்னை காதலிக்கணும் கூட எதிர் பார்க்கல நான் வருத்த படும் போது ஒரு ஆறுதல் வார்த்தை அது கூட வேணாம் ஒரு துளி கண்ணீர் கூட எனக்காக உங்க கிட்ட இருந்து வராத ஸ்டீபன்… போதும் இது எதுவும் உங்ககிட்ட இருந்து  வரவே வராதுன்னு தெரிஞ்ச போச்சு…!!” என குமுறியவள் காதல் தந்த ஏமாற்றம் தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடி சென்றாள்…

தன் காதலுக்காக சண்டையிட்டு அழுது கொண்டு செல்லும் அமைரா.. ஒரு முறை ஏனும் திரும்பி    ஸ்டீபன் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை பார்த்து இருந்தாள்… அந்த கண்ணீர் அவள் மீது கொண்ட காதலூக்கான சாட்சி என கண்டு கொண்டு இருப்பாள்… ஆனால் அவள் துரதிர்ஷ்டமோ அதை பார்க்கவில்லை இல்லை இல்லை அவன் காட்டவில்லை… தடுத்து விட்டான் அந்த கல் நெஞ்சகாரன் …

அமைரா பயிற்சியில் சேர்ந்து முதலில் இருந்தே அவளின் துரு துரு செயல்களால் ஸ்டீபனை கவர்ந்து இருந்தாள்… அதே போல் பயிற்சியிலும் கெட்டிக்காரிஎன பெயர் எடுத்தவள்… என்ன சில பேர் சில வேலைகளை அசால்ட்டாக செய்து விடுவர் சிலர் அதற்காக பல மென கெடல் இட வேண்டும்… அதில் முதல் ரகம் சோனாலி எந்த வேலையையும் அசால்ட்டாக செய்பவள் தான் சில சமயம் ம்ஹும்.. பல சமயம் ஆர்வம் மிகுதியில்  சொந்தமாக செய்வினை செய்து கொள்வாள்… அவ்வளவே…!!”(எதே அவ்வளவு தானா…?? ஹிஹி அட ஆமாம் பாஸ் அவ்வளவே தான்…!)

அப்படி மாட்டிக்கொண்ட சமயம் எல்லாம் ஸ்டீபன் சென்று காப்பாற்றி இருக்கிறான்… ஏனோ முதல் நாள் இருந்தே அவனுக்கு அவள் மீது தனி கவனம் அதனாலேயே அவனிடம் மாட்டி பல தண்டனைகள் பெற்று இருக்கிறாள்… பயிற்சியின் போது அவள் கண்களில் பல முறை அவனுக்கான காதலை பார்த்து இருக்கிறான்…

ஆனால் எந்நேரமும் ஸ்டீபனின் உயிர் எதிரிகள் கையால் பறிக்க படலாம்… அப்படி நிச்சயமற்ற வாழ்க்கையில் அவனை நம்பி வருபவளுக்கு நிம்மதியான வாழ்க்கை கொடுக்க முடியாது என்பதை நன்கு அறிந்தவன்… அமைராவை விட்டு ஒதுங்க ஆரம்பித்தான்… அவன் விட்டாலும் விடாமல் தொடரும் காதல் பந்தத்தை சுமந்து கொண்டு அவனிடமே வந்து சரணடையும் காட்டு ரோஜாவை தடுக்க முடியாமல் திண்டாடி தான் போனான்… சில சமயம் அவள் அருகில் இருந்தால் கட்டுப்பாட்டை இழக்கிறான்… அந்த ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு அவனின் வார்த்தைகளில்…

இன்று கூட உள்ளே நுழைந்த ஸ்டீபன் முதலில் கண்கள் பார்த்தது ரத்த காயங்களோடு நின்றவளை தான்…அவன் இதயம் உள்ளே சிந்திய ரத்தம் அவளுக்கு தெரியாதே…

இப்பொழுது கூட அவள் கண்ணீர் அவன் உயிரை கூறு போட்டதை அவள் அறியாள்… அவள் அறியவும் விட மாட்டான்…”போகட்டும்… அவளாவது நிம்மதியா இருக்கட்டும்…!!”என நினைத்தவன்… ஆழ்ந்த சுவாசம் எடுத்தவம்… உள்ளும் வெளியும்  இறுகி இரும்பாக நின்றான்… 

காதலும் வலியும் ஒன்று … போர்க் கலைகளைக்  பயின்ற அவனால் காதல் கலையை பயில முடியவில்லை… போலும்..

*******

அறை தூக்கத்தில் விழித்த அவினி தகப்பன் மடியிலே அவன் அரவணைப்பில் உறங்கி விட… அவளை தூக்கி சென்று படுக்க வைத்தவன் எப்பொழுதும் வைக்கும் முத்தத்தை நெற்றியில் கொடுத்தவன் வெளியே வந்து…

காயம் பட்ட கனலினியின் கையை பிடித்து ஊதி விட…

“உடல்ல பட்ட காயம் மருந்து போட்டுட்டீங்க  துரியன்…மனசுல பட்ட காயத்துக்கு…???” என அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்தது உணர்ச்சிகள் வெடித்து சிதறின…

“அதுக்கு என்ன மருந்துனு எனக்கு தெரியுமே…!!’என்றவன் கனலினியின் உள்ளங்கையில் முத்தமிட்டபடி மேலே நகர 

“ப்ளீஸ் துரியன் உங்க தொடுகை என்ன பலவீனமாக்கும் உங்களுக்கு நல்லா தெரியும் ப்ளீஸ்…காய படுத்தாதீங்க…!!” என கண்ணீர் சிந்த…

அவள் கண்களை மென்மையாக துடைத்து விட்டவன்… அவளை கையில் தூக்கி சென்று படுக்கையில் விட்டு… அவள் கைகளை எடுத்து தனக்குள் பொதிந்து கொண்டவன்…

“சில சமயம் நம்மவங்களுக்கு நாமளே காயம் கொடுக்கும் படி ஆகிடும்… அதை  வாங்குறவங்கள விட கொடுக்குறவங்களுக்கு தான் வலி அதிகம்… உனக்கு நான் என்ன சமாதானம் சொன்னாலும் உன் காயத்துக்கு மருந்தாகாதுனு எனக்கு தெரியும்…!!”

“கனல் உன் கிட்ட பல விடயங்களை சொல்ல நினைச்சேன் ஆனா இப்போ அதுக்கான நேரம் என் கையில இல்லை… இப்போ உன் முன்னாடி டான் ட்ராக்கோவா வரல… உன் காதலன் துரியானா மட்டும் தான் வந்து இருக்கேன்…  எதிர் வர போற சவால்களை  சமாளிக்க எனக்கு சக்தி வேணும் உனக்கே தெரியும் அது உன்னால மட்டும் தான் எனக்கு கொடுக்க முடியும்… உன்னை வற்புறுத்த மாட்டேன்… ஆனா…??” என்றவன் பிணைந்த இருந்த கைகளை அழுந்த முத்தமிட்டவன் அவளிடம் இருந்து விலக எத்தனிக்க…

அவன் இடையோடு வளைத்து கட்டி கொண்டவள்…” ஐ லவ் யூ லாட் துரியன்…!!” என்றவள் நீர் பெருகிய கண்களோடு அவனை யாசிக்க…

குனிந்து அக்கண்களில் முத்தமிட்டவன்… முத்தம் தொடர்கதையாகி அவள் நாசி வழி இறங்கி உதடுகளில் நிலைத்தது…

அவள் உதடு வழி உயிரை குடிக்க தொடங்கியவன் கையில் பாவையானாள்… இருவர் உதடுகளும் உறவாடி நாவுகள்  பின்னிக் கொள்ள   ஆழ்ந்த முத்தம் 

 இடைஞ்சலாக ஆடை நீக்க போராடிய காதலனை தடுத்தவளே ஆடையை அவிழ்த்து விருந்தாக அவனுக்கு கொடுக்க…

முந்திரி பழத்திற்காக ஏங்கி இருந்தாவன் பழுத்த பழத்தை பார்த்ததும் பாய்ந்து கவ்வி கொண்டான்… நுனியில் தொங்கிய முந்திரியை விரும்பி இழுத்து கடித்து சப்ப…”அவ்வ்வ்…ஹாஅ…!!” என துள்ளியவால் அவன் தலையை தன் மார்போடு சேர்த்து அணைக்க…பதமாக கடிக்க சொல்ல…

 மென்மையின் இலக்கணமே அறியாதவனிடம் வெளிப்பட்டது அத்தனையும் வன்மை மட்டுமே…

கொடுப்பது துரியனாக இருந்தால் வலிகளையும் சுகமாகவே தாங்க தயாரானாள் மங்கை…

வாயால் கொத்து பழத்தை பறித்தவனின் கைகள் பாதாளம் சென்று மர வள்ளி கிழங்கு செல்ல பாதை தேடிடா…

“ஸ்ஸ்ஸ்.. அம்மாஆஆஆஆ ம்ம்ம்ம் துரி…ஹான்…!!” என மன்னவனின் மும்முனைத் தாக்குதல் தாளாது துவல… அவளில்  கிழங்கை புதைக்க போனவனை உருட்டி தள்ளியவள்…

தன்னை நிந்தித்த காமனுக்கு வதை சட்டம் தன் உதட்டையும் நாவையும் கொண்டு செயல் படுத்த…

“ஷ்ஹா…வ்ம்ம்ம்…ஹா…கனல்ல்ல்.. !” என அவளால் துள்ளியவன்…கனலினி தலையை பிடித்து மேலும் உள்ளே தள்ள…

உதட்டில் தேன் வடிய கிடந்தவளை அள்ளி எடுத்து போட்டு கொண்டவன்… அவள் இதழ்களை தன் உதட்டால் துடைத்தவன்…அவள் கைகளில் தன்னை ஒப்புவித்து விட்டு தோரணையாக படுத்து கொள்ள… தன் சுந்தரவனக் காட்டில் பருத்த கிழங்கை உள் வாங்கியவள்… அவன் மீது உண்டான காதல் ஆசையில் துள்ளி விளையாடியவள்… “ஹாவ்வ்வ் ம்ம்ம்ம்ம்…. மாஆஆ.. கண்கள் சொருக அவன் சக்திகளை  பிழிந்து எடுத்தவள்… துரியனின் மார் மீதே துவண்டு விழ அவளை கட்டி கொண்டு அசுவாச படுத்தியவன்…

சிறிது நேர ஓய்வு கொடுத்து… மீண்டும் அவளை நாடினான்… ஒரே இரவில் கலைகள் அறுபதையும் அவளிடம் செயல் படுத்தியவன்… விடியும் கனலை விட்டு இம்மியும் நகர வில்லை…

ஆனால் விடியல்…???

சிதிலமாய் போனவனை…

சித்திரமாக மாற்றியதேனடி…!!

நான் வீழ்வேனென்று

காத்திருக்கும் மூடர் கூட்டம்…!!

 எங்கனம்  அறியும் என் உயிர்

 உன் வசம் என்று…!!

அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகியவன் சென்று இருந்தான்… யாரும் அவனை அணுக முடியாதா தூரத்திற்கு…

சிதிலமாகுமோ கனவுகள்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top